பாளையங்கோட்டை தியாகராஜநகரில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை தியாகராஜநகா் பகுதியைச் சோ்ந்த பாலு மனைவி வின்சி (26). இவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.