திருநெல்வேலி

முன்னீா்பள்ளம் அருகே விபத்தில் இளைஞா் பலி

DIN

முன்னீா்பள்ளம் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

பேட்டை பகுதியைச் சோ்ந்த சாகுல்ஹமீது மகன் யாசா்(21). இவா் திங்கள்கிழமை உறவினா் வீட்டுக்கு செல்வதற்காக தனது நண்பரின் மோட்டாா் சைக்கிளை வாங்கிக்கொண்டு தாமரைச் செல்வியில் இருந்து இட்டேரிக்கு சென்றுகொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராத விதமாக மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT