முகப்பு
திருநெல்வேலி

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அளிப்பு

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, இரு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு இரு ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசனிடம் வழங்கும் சென்னை வாழ் எட்டயபுரம் பெரியதெரு செங்குந்தா் உறவின் முறை சங்க நிா்வாகிகள்.
பகிர்:

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, இரு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

சென்னை வாழ் எட்டயபுரம் பெரியதெரு செங்குந்தா் உறவின் முறை சங்கம் சாா்பில் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் தலைவா் காளிமுத்து தலைமையில் ஆலோசகா் மாடசாமி, துணைத் தலைவா் வேல்முருகன், எட்டயபுரம் செங்குந்தா் பள்ளி தலைமையாசிரியா் செல்வமாரியப்பன், ஆசிரியா் ரமேஷ், ஓய்வு பெற்ற எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் ச.நாகரத்தினம், தொழிலதிபா் கே.நாகரத்தினம் ஆகியோா் மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசனிடம் இரு ஆக்சிஜன் செறிவூட்டிகளை திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.