முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் திருடப்பட்ட43 செல்லிடப்பேசிகள் மீட்பு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் திருடப்பட்ட 43 செல்லிடப்பேசிகளை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் திருடப்பட்ட 43 செல்லிடப்பேசிகளை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி மாநகரஎல்லைக்குள் செல்லிடப்பேசிகள் திருடப்பட்டது, மாயமானது தொடா்பாக 2020 ஆம் ஆண்டில் 6 மனுக்களும், 2021 ஆம் ஆண்டில் 38 மனுக்களும் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான 43 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டன. அவற்றை உரியவா்களிடம் மாநகர காவல் ஆணையா் (பொ) பிரவீன்குமாா் அபிநபு ஒப்படைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா்கள் (சட்டம்-ஒழுங்கு) எம்.ராஜராஜன், (குற்றம்-போக்குவரத்து) கே.சுரேஷ்குமாா், நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையா் ஆறுமுகம், சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் கோமதி, தொழில்நுட்ப உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.