முகப்பு
இந்தியா

நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்!

நாக்பூர் அருகே மெமு ரயில் திடீரென தடம்புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 30 மார்ச், 2026 at 3:09 AM
கோப்புப்படம்.
பகிர்:

நாக்பூர் அருகே மெமு ரயில் திடீரென தடம்புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், பாலகாட்டில் இருந்து மகாராஷ்டிராவின் இத்வாரிக்குச் சென்ற ரயில், ஞாயிற்றுக்கிழமை நாக்பூர் அருகே தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கலாம்னா மற்றும் காம்ப்டீ இடையே இரவு 9:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறினர்.

விபத்தில் பாலகாட் - இத்வாரி மெமு ரயிலின் முதல் பெட்டியின் முன் பக்க இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. "ரயில் கட்டுப்பாடான வேகத்தில் சென்றதால், பெரும் சேதமோ அல்லது உயிரிழப்போ தவிர்க்கப்பட்டது," என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், "தண்டவாளத்திற்கு அருகில் மிக நெருக்கமாக தண்டவாளக் கட்டைகள் வைக்கப்பட்டிருந்தது ரயில் தடம் புரளுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார்.

தடம் புரளுவதற்கு சற்று முன்பு பலத்த சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். விபத்தின் காரணமாக ஒரு பெட்டியின் சக்கரம் சேதமடைந்தது கண்டறியப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் ரயில் சேவைகள் தடையின்றித் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

summary

A train from Balaghat in Madhya Pradesh to Itwari in Maharashtra derailed near Nagpur on Sunday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.