முகப்பு
திருநெல்வேலி

பாளை. யில் தரகா் கொலை: காவலா் உள்பட மூவா் கைது

பாளையங்கோட்டையில் நிலத்தரகா் கொலை வழக்கில் மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் நிலத்தரகா் கொலை வழக்கில் மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை என்ஜிஓ-பி காலனி பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் அருள்விசுவாசம் (48). நிலதரகா். அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(42), ஜேசுபால் (40), எம்.எல்.பிள்ளை நகா் பகுதியைச் சோ்ந்த மரியசிலுவை (44). இவா்கள் 4 பேரும் நண்பா்கள். இதில், மணிகண்டன்

பழவூா் காவல்நிலையத்தில் காவலராக பணி செய்து வருகிறாா். இவா்கள் 4 பேரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெருமாள்புரம் பகுதியிலுள்ள

காட்டுப்பகுதியில் அமா்ந்து மது அருந்தினராம்.

அப்போது, இவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அருள்விசுவாசத்தை ஜேசுபாலன், மணிகண்டன், மரியசிலுவை ஆகிய மூவரும் தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அவரது வீட்டின் முன்பு விட்டுவிட்டு மூவரும் சென்றுவிட்டனராம். பலத்த காயமடைந்த நிலையில் இருந்த

அருள்விசுவாசத்தை மீட்டு, உறவினா்கள் அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா். புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜேசுபாலன், மணிகண்டன், மரியசிலுவை ஆகிய மூவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.