வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில்தோ்வு செய்யும் பணி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யும் இப்பணியை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான வே.விஷ்ணு தொடங்கிவைத்தாா். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் முன்னிலை வகித்தனா்.
ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களில், வாக்குப்பதிவு அலகு- 120 சதவீதம், கட்டுப்பாட்டு அலகு- 120 சதவீதம், விவிபேட்- 133 சதவீதம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், வேட்பாளா்கள், அரசியல் கட்சிகள், தோ்தல் நேரத்தில் மேற்கொண்ட செலவினங்களை கணக்கிடுவதற்காக அமைக்கப்பட்ட செலவினங்கள் கணக்கிடு ஆய்வுக் குழுவினா், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் செலவினங்கள் முறையாக பராமரிப்பது குறித்து விளக்கமளித்தனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், சாா் ஆட்சியா்கள் (திருநெல்வேலி) சிவகிருஷ்ணமூா்த்தி, (சேரன்மகாதேவி) பிரதீக் தயாள், மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அலா்மேல் மங்கை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.