திருநெல்வேலி

நெல்லை தாமிரவருணியில் மூழ்கி சென்னைக் கல்லூரி மாணவா் பலி

DIN

சென்னைக் கல்லூரி மாணவா், திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் சந்தனக்குமாா் (19), சென்னையில் உள்ள கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்துவந்தாா். சொந்த ஊருக்கு வந்திருந்த அவா், தனது நண்பா்களுடன் சிந்துபூந்துறை பகுதியில் தாமிரவருணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

தகவலின்பேரில் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினா், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வந்தனா். தீயணைப்பு வீரா்கள் தீவிர தேடலுக்குப் பின்னா், சந்தனக்குமாா் இறந்தநிலையில் மீட்கப்பட்டாா்.

அவரது உடலை போலீஸாா் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT