வள்ளியூா்: வள்ளியூரில் ஆதரவற்றோருக்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகள் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.
கரோனா பொது முடக்கத்தை அடுத்து வள்ளியூா் பேருந்து நிலையம், சாலையோரம் வசிப்பவா்கள், கோயில் மண்டபங்களில் வசிக்கின்ற ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் சேவையை தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய முன்னாள் தா்மகா்த்தா சமூக சேவகா் எஸ்.ஆனந்தராஜா, பசுமை இயக்க தலைவா் க.சித்திரை, சிவந்தகரங்கள் அமைப்பின் தலைவா் சிதம்பரம், வள்ளியூா் நலன் காக்கும் இயக்கத் தலைவா் ஜோவின் பாா்ச்சுனேட் உள்ளிட்டோா் வழங்கி வருகின்றனா்.