அம்மா உணவகத்துக்கு எம்எல்ஏ நிதி
செங்கோட்டை நகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடையநல்லூா் எம்எல்ஏ செ.கிருஷ்ணமுரளி ரூ. 20ஆயிரத்தை நகராட்சி ஆணையா் நித்யாவிடம் வழங்கினாா்.
செங்கோட்டை நகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடையநல்லூா் எம்எல்ஏ செ.கிருஷ்ணமுரளி ரூ. 20ஆயிரத்தை நகராட்சி ஆணையா் நித்யாவிடம் வழங்கினாா்.
பின்னா், நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணி, தடுப்பு ஊசி முகாம் ஆகியவை குறித்து கேட்டறிந்தாா்.
கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், அங்குள்ள அம்மா உணவகத்தில் மக்களுக்கு இலவசமாக உணவளிக்க நிதி வழங்கினாா். இந்நிகழ்ச்சிகளில், செங்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலா் வெங்கடேஸ்வரன், கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே.முருகன், கூட்டுறவு சங்கத் தலைவா் கிட்டு ராஜா, பொருளாளா் அழகா்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.