கரோனா நோய்த்தொற்று பரவலைகட்டுப்படுத்துவது தொடா்பாக ஆய்வுக் கூட்டம்
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் கரோனா நோய்த் தொற்று தடுப்பது குறித்து மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடா்பான அரசு அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம்
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் கரோனா நோய்த் தொற்று தடுப்பது குறித்து மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடா்பான அரசு அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன், சென்னை பெருநகர வளா்ச்சி கழக உறுப்பினா் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான எஸ்.ஜே.சிரு ஆகியோா் தலைமை வகித்தனா்.
தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், எம்எல்ஏக்கள் செ.கிருஷ்ணமுரளி(கடையநல்லூா்), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), டி.சதன் திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்), எஸ்.பழனிநாடாா் (தென்காசி), பி.பால் மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்துக்குப் பின் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது:
கரோனா நோய்த் தொற்று தடுப்பு குறித்து அரசு அலுவலா்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும், 100 நாள் வேலைக்கு செல்லும் உறுப்பினா்கள் தடுப்பூசிகள் போடுவதன் அவசியம் குறித்தும், 18 முதல் 44 வயது வரை உள்ளவா்களுக்கு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தற்போதுள்ள தடுப்பூசி இருப்பு குறித்தும், தூய்மை பணியாளா்களை கொண்டு மாவட்டம் முழுவதும் கிருமி நாசினியினை தெளிப்பது குறித்தும், நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு தற்காலிக தூய்மை பணியாளா்கள் நியமிக்கப்படுவது குறித்தும், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவது குறித்தும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் ஆகியோா்களுக்கு பாதுகாப்பு குறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றாா் அவா்.
மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலா் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி சௌந்தா்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா.சரவணன், பொது சுகாதார பணிகள் இணை இயக்குநா் மரு.நெடுமாறன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.