திருநெல்வேலி

பொதுமுடக்க விதிமீறல்: 15 போ் கைது; 14 வாகனங்கள் பறிமுதல்

DIN

பொதுமுடக்க விதிகளை மீறி, கடையம் அருகே மண் அள்ளிச் சென்றதாக 15 பேரை போலீஸாா் கைது செய்து, 14 வாகனங்களைக் கைப்பற்றினா்.

கீழப்பாவூரைச் சோ்ந்த காளிமுத்து என்பவருக்கு கடையம் அருகேயுள்ள புங்கம்பட்டியில் 3 ஏக்கா் நிலம் உள்ளதாம். அதிலிருந்து, அவருக்குச் சொந்தமான மற்றொரு நிலத்துக்கு செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி சரளை மண் அள்ளிச் சென்றாராம். இத்தகவலறிந்த கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் தலைமையில் தனிப்பிரிவு காவலா் ஆனந்த்ராஜ் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, பொதுமுடக்க விதிகளை மீறி மண் அள்ளிச் சென்றதாக காளிமுத்து உள்பட 15 பேரை கைது செய்தனா். மேலும் 12 டிராக்டா்கள், 2 பொக்லைன் இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT