முகப்பு
திருநெல்வேலி

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 31 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 31 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 31 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தீபாவளி பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்த விதிமுறைகளை மீறுவோா் மீதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடிப்பவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் அறிவித்திருந்தாா்.

அதன்படி தீபாவளி பண்டிகையான வியாழக்கிழமை அரசு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டத்தில் 31 போ் மீது 25 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.