முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே விபத்தில் சிறுமி பலி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பனை மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுமி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பனை மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுமி உயிரிழந்தாா்.

வள்ளியூரைச் சோ்ந்தவா் முத்துஜோதி (35). இவா் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலையில் காரில் கடையம்

அருகேயுள்ள திருமலையப்பபுரத்திற்கு சென்று கொண்டிருந்தாராம். களக்காடு - சேரன்மகாதேவி பிரதான சாலையில் இடையன்குளம் சாலை சந்திப்பு அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து காா் சாலையோரம் உள்ள பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முத்துஜோதியின் மகள் விஜயராகவி (4) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →