களக்காடு கோயிலில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்
களக்காடு ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.
களக்காடு ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.
களக்காடு ஐயப்பன் கோயில் நடை செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது. காா்த்திகை 1ஆம் தேதியான புதன்கிழமை அதிகாலை கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். பகலில் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் விஸ்வரூப தரிசனம், சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அத்தாழ பூஜை நடைபெற்றது.
டிச. 9ஆம் தேதி வருஷாபிஷேகம், 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா், பக்தா்கள் செய்திருந்தனா்.