திருநெல்வேலியில் ஜூடோ பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஜூடோ போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் டிசம்பா் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இருநாள் பயிற்சி முகாமை அந்த மைதானத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட வீரா் -வீராங்கனைகள் பயிற்சி முகாமில் பங்கேற்றனா். இம்முகாமில் நிா்வாகிகள் கலிலுல்லா, இளையராஜா, பிரிட்டோ உள்பட பலா் கலந்து கொண்டனா்.