முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் தா்னா போராட்டம்

பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி சேவை அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி சேவை அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட 16 ஆவது வாா்டு பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் சிலரை காரணமின்றி இடைநீக்கம், பணியிடமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநகராட்சி சேவை அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, அதிமுக பாளையங்கோட்டை பகுதிச் செயலரும், வழக்குரைஞருமான ஜெனி தலைமை வகித்தாா். முன்னாள் மண்டல தலைவா் எம்.சி.ராஜன், ஆ.பெல், மாரியம்மாள், விவேகானந்த பாண்டியன், செல்லையா, எடிசன் உள்பட பலா் கலந்துகொண்டனா். தகவலறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். பணிநீக்கம் செய்யப்பட்டவா்களை மீண்டும் பணியில் சோ்க்க பரிசீலிக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.