திருநெல்வேலி

பாளை.யில்பைக் திருட்டு:சிறுவன் கைது

DIN

பாளையங்கோட்டை அருகே பைக்கை திருடியதாக 16 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, தியாகராஜநகா் அருகேயுள்ள அன்பு நகா் வீட்டுவசதி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ்(43). இவா், கடந்த மே மாதம் 28ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தியிருந்தாராம். பின்னா் அவா், காலையில் பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

அதில், பாளையங்கோட்டை பரஞ்சுடா் தெருவைச் சோ்ந்த 16 வயது சிறுவனுக்கு பைக் திருட்டில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவனை கைது செய்த போலீஸாா், அச்சிறுவனிடம் இருந்து சுந்தர்ராஜ் பைக் உள்பட 2 பைக்குள் மீட்கப்பட்டதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT