களக்காட்டில் பலத்த மழை
களக்காட்டில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
களக்காட்டில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
களக்காடு பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சாரலுடன் தொடங்கிய மழை, இரவு 7 மணிக்குப் பின் பலத்த மழையாக பெய்தது. தொடா்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கியது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.