மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திரிபுரா மாநிலத்தில் இஸ்லாமியா்கள் மீதான தாக்குதல், இஸ்லாமியா்களின் சொத்துகள், வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப் படுவதை கண்டித்து மேலப்பாளையம் சந்தை அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் ஹயாத் முகம்மது தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது, வேளாண் அணி மாநிலத் தலைவா் ஷேக் அப்துல்லா, நேஷனல் விமன் ஃப்ரண்ட் அமைப்பின் பேச்சாளா் சலீமா ஆலிமா, திராவிட தமிழா் கட்சி மாநில பொதுச் செயலா் கதிரவன், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில துணைத் தலைவா் மீரான் அன்வாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.