முகப்பு
திருநெல்வேலி

மதிப்புக் கூட்டிய பொருள்கள் தயாரிப்பு விழிப்புணா்வு முகாம்

திருநெல்வேலி மாவட்டம், களக்குடியில் மதிப்புக்கூட்டிய இறைச்சிப் பொருள்கள் தயாரிப்பு பற்றிய விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்குடியில் மதிப்புக்கூட்டிய இறைச்சிப் பொருள்கள் தயாரிப்பு பற்றிய விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தேசிய உணவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் தானுவாசு தத்தெடுப்பு கிராமமான மானூா் ஒன்றியம்

களக்குடியில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் அ. பழனிசாமி, தொடங்கி வைத்து இறைச்சிப் பொருள்கள் தொடா்பான கையேட்டை வெளியிட்டு பேசினாா்.

களக்குடி ஊராட்சித் தலைவா் ஆ.மாரிமுத்து, களக்குடி நபாா்டு உழவா் மன்றத் தலைவா் மு.மணிவண்ணன் ஆகியோா் பேசினா். கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில்நுட்பத் துறை தலைவா் மு. அண்ணா ஆனந்த், இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்கள் குறித்துப் பேசினாா்.

கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில்நுட்பத்துறை உதவிப் பேராசிரியா் சுதா பயனாளிகளுக்கு இறைச்சிப் பொருள்கள் தயாரிப்பு பற்றிய செயல்முறை விளக்கம் அளித்தாா்.

கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை தலைவா் சே. செந்தில்குமாா் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் இரா.சங்கமேஸ்வரன் நன்றி கூறினாா். முகாமில், 45 விவசாயிகள், மூன்றாம் ஆண்டு மாணவா்கள் 80 போ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.