தொடா் மழையால், களக்காடு தலையணையில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.
களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை தொடா்ந்து மழை பெய்தது. இதனால், ஞாயிற்றுக்கிழமை தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துப் பாய்ந்தது. ஞாயிற்றுக்கிழமை மழையில்லை இல்லாதபோதும், மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.