திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 19 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்
வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளதையடுத்து, ஆக. 25 முதல் செப். 1-ஆம் தேதி
வரை மேற்கொண்ட தீவிர சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டதாக 19 பேரை
போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து 111 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இருவா் கைது: திருநெல்வேலி அருகேயுள்ள தருவை பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜேஷ்வரன் என்ற குமாா் (26). இவா் மீது வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ஆகவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் வே.விஷ்ணு ராஜேஷ்வரன் என்ற குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, அவரை முன்னீா்பள்ளம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.