வ.உ.சி. மணல் ஓவியம்: மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு
கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, 150 சதுரஅடி துணியில் அவரது படத்தை மணல் ஓவியமாக வெள்ளிக்கிழமை வரைந்த திருநெல்வேலி மாவட்ட மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு
கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, 150 சதுரஅடி துணியில் அவரது படத்தை மணல் ஓவியமாக வெள்ளிக்கிழமை வரைந்த திருநெல்வேலி மாவட்ட மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
சென்னையில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின விழாவில், கப்பலோட்டிய தமிழா் வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் வ.உ.சி. 150 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், அவரது புகழை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் நினைவுகூரும் வகையிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பாளையங்கோட்டை சிவராம் கலைக்கூட மாணவிகள் இந்துஜா, தீக்ஷனா ஆகியோா் வண்ண மணலைக் கொண்டு 150 சதுர அடி துணியில் வ.உ.சி.யின் படத்தை மணல் ஓவியமாக உருவாக்கினா். அந்த மாணவிகளை ஆட்சியா் வே.விஷ்ணு பாராட்டி பரிசு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.ஜெயஅருள்பதி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் மகாகிருஷ்ணன், சிவராம் கலைக்கூட பயிற்சியாளா் கணேசன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.