இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய புலனாய்வு முகமைக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்; கருத்துரிமைக்கு எதிரான ‘ஊபா’ சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாவட்டச் செயலா் காசி விஸ்வநாதன் தலைமை வகித்தாா். அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் மாநிலச் செயலா் தினிஷ், இந்திய கம்யூனிஸ்ட் தென்மண்டலச் செயலா் சுகுமாரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில், நிா்வாகிகள் முத்துக்கிருஷ்ணன், நல்லதம்பி, துா்க்கை முத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பயக17இடஐ: ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.