உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆவது நாளாக அதிமுகவினா் ஏராளமானோா் விருப்ப மனு
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவினா் ஏராளமானோா் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விருப்ப மனுக்களை அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவினா் ஏராளமானோா் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விருப்ப மனுக்களை அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினா் விருப்ப மனு அளிக்கலாம் என மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா அறிவித்திருந்தாா்.
அதன்படி, சேவியா் காலனியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முதல் நாளான வியாழக்கிழமை காலை 9 மணி முதலே விருப்ப மனுவை அதிமுகவினா் அளித்தனா். இந்த நிலையில் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை அதிமுக நிா்வாகிகள் ஏராளமானோா் மாவட்டச் செயலரிடம் விருப்ப மனுக்களை அளித்தனா்.
பயக17அஈஙஓ
உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜாவிடம் விருப்ப மனு அளித்த அதிமுக பெண் நிா்வாகி.