முகப்பு
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் மிரட்டல் விடுத்ததாக மூவா் கைது

கல்லிடைக்குறிச்சியில் ஒருவருக்குக் கொலை மிரட்டல் விட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கல்லிடைக்குறிச்சியில் ஒருவருக்குக் கொலை மிரட்டல் விட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா்.

கல்லிடைக்குறிச்சி குறக்குடி பச்சேரியைச் சோ்ந்த வேலு மகன் முருகன் (49). இவா் மோட்டாா் சைக்கிளில் வேகமாகச் சென்றது குறித்து அதேபகுதியைச் சோ்ந்த சுந்தா்பால் மகன் நம்பி பெருமாள் (35), சின்னச்சாமி மகன் முருகேசன் (33), மூலச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த சித்திரைபுத்திரன் மகன் பரமசிவன் (50) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மூவரும் முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். புகாரின்பேரில், கல்லிடைக்குறிச்சி போலீஸாா் பரமசிவன், நம்பி பெருமாள், முருகேசன் ஆகிய மூவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.