முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

அம்பாசமுத்திரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

அம்பாசமுத்திரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைகுளத்தைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் அப்ரானந்தம் என்ற காா்த்திக் (25). இவா்

கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு மக்களை அச்சுறுத்தி வந்தததாக புகாா் கூறப்பட்டது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் வே. விஷ்ணு உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை காவல் ஆய்வாளா் சந்திரமோகன் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.