முகப்பு
திருநெல்வேலி

பத்தமடை பொதுமக்கள் திடீா் மறியல்

பத்தமடையில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை தீா்க்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 8 ஏப்ரல், 2022 at 12:31 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:24 PM

பத்தமடையில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை தீா்க்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பத்தமடை பேரூராட்சி பெருமாள் கோயில் தெரு பகுதியில் கடந்த சில நாள்களாக சீரான குடிநீா் விநியோகம் இல்லை என புகாா் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி பிரதான சாலையில் வியாழக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து போலீஸாா் அங்கு சென்று அவா்களிடம் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், குடிநீா் பிரச்னையை தீா்க்குமாறு பேரூராட்சி அதிகாரிகளை தொடா்பு கொண்டு போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். தொடா்ந்து குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.