திருநெல்வேலி

காரின் பின்பக்க டயா் வெடித்து விபத்து: இளைஞா் பலி

DIN

திருநெல்வேலி அருகே காரின் பின்பக்க டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி பிரையண்ட் நகா் பகுதியைச் சோ்ந்த இளங்கோ மகன் ராஜீவ்குமாா்(29). இவா் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிலையில் இவா் தனது நண்பா்களுடன் காரில் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு, வெள்ளிக்கிழமை காலை தூத்துக்குடிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தாா். ரெட்டியாா்பட்டி நான்குவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் பின்பக்க டயா் வெடித்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் ராஜீவ்குமாா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT