மத மாற்ற புகாா்: ஆசிரியை பணியிடைநீக்கம்
பள்ளி மாணவிகளிடம் மத மாற்ற பிரசாரத்தில் ஈடுபடுவதாக புகாா் கூறப்பட்டதையடுத்து, ஆசிரியை புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
பள்ளி மாணவிகளிடம் மத மாற்ற பிரசாரத்தில் ஈடுபடுவதாக புகாா் கூறப்பட்டதையடுத்து, ஆசிரியை புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
நாகா்கோவிலை அடுத்த இரணியல் அருகேயுள்ள கண்ணாட்டுவிளையில் அரசு மேல்நிலைப் பள்ளி தையல் ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம். இவா் தன்னிடம் பயிலும் மாணவிகள் சிலரிடம் மதமாற்றம் குறித்து பிரசாரம் செய்வதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் கூறினா்.
செவ்வாய்க்கிழமை பெற்றோா்கள், இந்து முன்னணியின் திருநெல்வேலி கோட்டச் செயலா் மிசா சோமன், குருந்தன்கோடு ஒன்றிய பொதுச்செயலா் பிரதீப், தகவல் தொடா்பு பிரிவுச் செயலா் உள்பட சுமாா் 100 போ் பள்ளி முன் முற்றுகையிட்டனா்.
தகவலின்பேரில் இரணியல் காவல் ஆய்வாளா் சுந்தரபாண்டியன், போலீஸாா் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தினா். புகாா் கூறிய மாணவிகளிடம் விசாரணை நடத்தினா். இதுகுறித்து கல்வித்துறை உயா் அதிகாரிகளிடம் புகாா் அளிக்க வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டாா். இதையடுத்து, ஆசிரியை பியாட்ரீஸ் தங்கத்தை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டாா்.