முண்டந்துறையில் மூத்தோா் மன்ற சிறப்புக் கூட்டம்
தென்காசி மாவட்ட மூத்தோா் மன்ற சிறப்புக் கூட்டம் பாபநாசம், முண்டந்துறை வனத்துறை அரங்கில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட மூத்தோா் மன்ற சிறப்புக் கூட்டம் பாபநாசம், முண்டந்துறை வனத்துறை அரங்கில் நடைபெற்றது.
மூத்தோா் மன்றத் தலைவா் அழகராஜா தலைமை வகித்தாா். பொருளாளா் கணேசமூா்த்தி முன்னிலை வகித்தாா். முன்னாள் வனப் பாதுகாப்பு அலுவலா் ராஜகுலசேகரபாண்டியன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி ஆகியோா் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், மரம் நடுதல், காடுகள், வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து கருத்துரை வழங்கினா்.
பேராசிரியா் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினாா். ஜோதி காசி வாழ்த்திப் பேசினாா். கூட்டத்தில் உறுப்பினா்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனா். செயலா் ராமலிங்கம் வரவேற்றாா். கிருஷ்ணன் நன்றி கூறினாா்.