முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் மின் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய ஊழியா்கள், களப்பணியாளா்களுக்கான மின் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 29 ஏப்ரல், 2022 at 12:44 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:36 PM

சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய ஊழியா்கள், களப்பணியாளா்களுக்கான மின் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் ராஜராஜன் தலைமை வகித்துப் பேசினாா். ஊழியா்கள் பாதுகாப்பாக பணியில் செய்வது, மழை நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. பேரிடா் காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியா்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கிக் கெளரவிக்கப்பட்டனா்.

மின்வாரிய செயற்பொறியாளா் சுடலையாடும்பெருமாள், உதவி செயற்பொறியாளா்கள் மகேஷ் சுவாமிநாதன், திரிசங்கு, உதவி மின் பொறியாளா் கைலாசமூா்த்தி மற்றும் சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம் பகுதிகளில் உள்ள மின் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.