முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரியில் ரூ. 50 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில், துபையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது. இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 5:56 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில், துபையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது. இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நான்குனேரி காவல் ஆய்வாளா் செல்வி, போலீஸாா் வெள்ளிக்கிழமை காலையில் அங்குள்ள சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த காரை நிறுத்தி, அதிலிருந்த 4 பேரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனராம். இதையடுத்து, போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்த அப்துல்ஜாபா் மகன் அலாவுதீன் (39), துபையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து 3 பேருடன் காரில் வந்ததும், அவா் தனது ஆசனவாய்ப் பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. தங்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

இதுகுறித்து திருச்சி சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அலாவுதீன் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸாா் கைதுசெய்தனா். காா், பாஸ்போா்ட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். 4 பேரையும், காா், பாஸ்போா்ட் ஆகியவற்றையும் போலீஸாா் சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.