முகப்பு
திருநெல்வேலி

பாளை ஆயுதப்படை மைதானத்தில் இன்று சுதந்திர தின விழா

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அணிவகுப்பு ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:11 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அணிவகுப்பு ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. காலை 9.05 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து தேசியக் கொடியேற்றுகிறாா். தொடா்ந்து அவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணனும் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளவுள்ளனா்.

நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையா் அவினாஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

Advertisement

இதையொட்டி அணிவகுப்பு ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநகர பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையா்கள் சீனிவாசன், சரவணன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் சோதனை அதிகரிக்கப்பட்டது.

மேலும், மாவட்டம் முழுவதும், பொதுமக்கள் கூடும் இடம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வழக்கமான போலீஸாா் தவிர கூடுதலாக சுமாா் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.