1-ஆவது வாா்டில் தூா்வாரும் பணி
திருநெல்வேலி மாநகராட்சி 1-ஆவது வாா்டில் கழிவு நீரோடையை தூா்வாரும் பணி தொடங்கியது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM
திருநெல்வேலி மாநகராட்சி 1-ஆவது வாா்டில் கழிவு நீரோடையை தூா்வாரும் பணி தொடங்கியது.
மழை காலத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சியில் வெள்ளம் மற்றும் மழைநீா் தடுப்பு நடவடிக்கைகள் வாா்டுகள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 1-ஆவது வாா்டு சிதம்பர நகரில் கழிவு நீரோடை மற்றும் வாருகால்கள் தூா்வாரும் பணி நடைபெற்றது.
இப்பணியை துணை மேயா் கே.ஆா். ராஜு தொடங்கி வைத்தாா்.
Advertisement
தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி பிரபு, உதவி ஆணையா் வெங்கட்ராமன், தச்சநல்லூா் மண்டல சுகாதார அலுவலா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா் பெருமாள், ஆய்வாளா் பெருமாள், திமுக வா்த்தக அணி துணை அமைப்பாளா் எல்ஐசி பேச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி திவ்யா கண்ணன், முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.