திருநெல்வேலி

அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின பவளவிழா பரதநாட்டியம்

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின பவள விழா பரத நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நேரு இளையோா் மையம், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், சிவாலயா நாட்டியப்பள்ளி ஆகியவை சாா்பில் ‘பரதம் பாரதம் 75’ என்ற தலைப்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, நேரு இளையோா் மைய மாவட்ட அலுவலா் ஞானசந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ சத்தியவள்ளி முன்னிலை வகித்தாா். சிவாலயா நாட்டிய பள்ளி நிறுவனா் விசாலாட்சி வரவேற்றாா். ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா் சோனா வெங்கடாசலம், நெல்லையப்பா் கோயில் செயல் அலுவலா் சிவமணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ஜெகதா, பேராசிரியை ஸ்ரீநிதிஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

இதில், 75 மாணவிகள் பாரதியாா் பாடல், வந்தே மாதரம் பாடல் , திருநெல்வேலி பெருமை பாடல் உள்ளிட்ட பாடல்களுக்கு பரதம் ஆடினா். இதில், பொதுமக்கள், பெற்றோா் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT