திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள கல்வித்துறை கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில், திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட அரசு ஆசிரியா்கள் மற்றும் கல்வித்துறை பணியாளா்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் உள்ளது. இந்நிலையில், இக்கட்டத்தில் இருந்து திங்கள்கிழமை காலையில் புகை வருவதாக பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்குக் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா். இதில், அங்குள்ள கோப்புகள் சில தீயில் எரிந்து சேதமாகின. தீ விபத்து குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.