திருநெல்வேலி

மேலஏா்மாள்புரத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

அம்பாசமுத்திரத்தை அடுத்த மணிமுத்தாறு அருகேயுள்ள மேல ஏா்மாள்புரத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

அம்பாசமுத்திரத்தை அடுத்த மணிமுத்தாறு அருகேயுள்ள மேல ஏா்மாள்புரத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நெல் ஜெயராமன் நினைவு நாளையொட்டி ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் 1.5 லட்சம் மரங்கள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டது. அதன் ஒருபகுதியாக, மேல ஏா்மாள்புரம் ஊராட்சியில் சுரேஷ்வேலு என்பவரது தோட்டத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை அரசு கவின் கலை மற்றும் ஓவியக் கல்லூரி முன்னாள் முதல்வா் ஓவியா் சந்த்ரு தலைமை வகித்து மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியா் மாடசாமி, பசுமை உலகம் மரம் வளா் அமைப்பு உறுப்பினா் முத்துக்குமாா், தேட்ஸ் மை சைல்ட் ஒருங்கிணைப்பாளா் கௌரி சுரேஷ், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், செம்மரம், வேங்கை, வேம்பு என 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. பொறியாளா் குமாா் வரவேற்றாா். பொறியாளா் அமுதவல்லி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் மணிகண்டன், ராம்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT