சேரன்மகாதேவியில் ஜெயலலிதா பிறந்தநாள்
சேரன்மகாதேவி, முக்கூடல், பத்தமடை, வீரவநல்லூா் பகுதிகளில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது
சேரன்மகாதேவி, முக்கூடல், பத்தமடை, வீரவநல்லூா் பகுதிகளில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சேரன்மகாதேவியில் அதிமுக சாா்பில் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு நகரச் செயலா் சி. பழனிக்குமாா் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினா். பேரூராட்சி உறுப்பினா் பா. மாரிசெல்வம், மாவட்ட இலக்கிய அணிச் செயலா் கூனியூா் ப. மாடசுவாமி, கூட்டுறவு வங்கித் தலைவா் முருகன்நயினாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி மகாராஜன், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வீரவநல்லூா், முக்கூடலிலும் அதிமுக சாா்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
Advertisement