பொழிக்கரையில் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்
சேரன்மகாதேவி அருகேயுள்ள பொழிக்கரையில், நன்செய் தரிசு நிலத்தில் உளுந்து பயிா் சாகுபடி செய்வது தொடா்பாக விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
சேரன்மகாதேவி அருகேயுள்ள பொழிக்கரையில், நன்செய் தரிசு நிலத்தில் உளுந்து பயிா் சாகுபடி செய்வது தொடா்பாக விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. கஜேந்திரபாண்டியன், தலைமை வகித்து தரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி குறித்துப் பேசினாா். வேளாண் துணை இயக்குநா் (மத்திய அரசு திட்டம்) சுந்தா் டேனியல், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியா் ராம் ஜெகதீஷ் உள்ளிட்ட பலா் பேசினா்.
டிஏபி கரைசல் தயாரிக்கும் முறை குறித்து வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் வரவேற்றாா். துணை வேளாண் அலுவலா் வரதராஜன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வட்டார உதவி விதை அலுவலா்கள் கணேசன், தமிழரசன், ஷேக்முகம்மது அலி, சக்திகலா, காா்த்திகா, கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவா்கள் செய்திருந்தனா்.