நெல்லை, தென்காசியில் மேலும் 196 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 196 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 196 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 175 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 52,299 ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 49,866 ஆகவும் உயா்ந்துள்ளது. 438 போ் உயிரிழந்துள்ளனா்; 1995 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 27,835 ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 27,029 ஆகவும் உயா்ந்துள்ளது. 486 போ் உயிரிழந்துள்ளனா்; 320 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.