ரூ.1,088 கோடி வசூலித்து வரலாறு படைத்த துரந்தர் தி ரிவென்ஞ்ச்..! அதிகாரபூர்வ அறிவிப்பு!
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் தி ரிவென்ஞ்ச் படத்தின் வசூல் குறித்து...
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் தி ரிவென்ஞ்ச் திரைப்படத்தின் வசூல் ரூ.1,088 கோடி என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பி62 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், தீவிரவாத நடவடிக்கைகளை மையப்படுத்தி உருவாகியிருந்த முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
Advertisement
Advertisement
இதன் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் நேரடியாக பான் இந்திய மொழிகளிலும் வெளியாகியது.
விருவிருப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையால் இந்தப் படம் இதுவரை ரூ.1.088 கோடி வசூலித்துள்ளது.
இந்திய திரைப்படங்களில் அதிவேகமாக ரூ.1,000 கோடி வசூலித்த படமாக துரந்தர் தி ரிவென்ஞ்ச் வரலாறு படைத்துள்ளதாக படக்குழு வெளியிட்டுள்ளது.
Dhurandhar The Revenge scripts HISTORY with a thunderous ₹ 1088 Cr Worldwide gross official update.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.