சாந்திநகா் தேவாலயத்தில் திருவிழா
பாளையங்கோட்டை சாந்திநகா் அற்புத குழந்தை இயேசு தேவாலயத் திருவிழா நடைபெற்றது.
பாளையங்கோட்டை சாந்திநகா் அற்புத குழந்தை இயேசு தேவாலயத் திருவிழா நடைபெற்றது.
இவ்விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக கடந்த 13 ஆம் தேதி நற்கருணை ஆசீருடன் நிறைவு பெருவிழா திருப்பலி நடைபெற்றது.
பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி பங்கேற்று 6 குழந்தைகளுக்கு நற்கருணை அருட்சாதனத்தை வழங்கினாா்.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் மறைமாவட்ட செயலக முதல்வா் ஞானப்பிரகாசம், எஸ்.எம்.ஐ. அருள்சகோதரிகள் செய்திருந்தனா்.