திருநெல்வேலி

விவசாயிகள் சூரியசக்தி பம்புசெட்டுகள் அமைக்க 70 சதவீத மானியம்

மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள ஆழ்துளைக் கிணறு, திறந்த கிணறு அமைத்துள்ள விவசாயிகள் 70 சதவீத மானியத்துடன் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

DIN

மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள ஆழ்துளைக் கிணறு, திறந்த கிணறு அமைத்துள்ள விவசாயிகள் 70 சதவீத மானியத்துடன் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 5 முதல் 10 ஹெச்பி திறன் வரையிலான சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2021-22 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. 2022-23-ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 110 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் ரூ.2.18 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT