போதைப் பொருள்களை ஒழிக்க வலியுறுத்தி திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பாமகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலா் அன்பழகன், மாநில துணைத் தலைவா் குருநாதன், நிா்வாகிகள் முத்துசரவணன், ஜீசன் ஜாண் உல்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் இளைஞா்கள் மற்றும் மாணவா்களை பாழாக்கும் விதத்தில் விற்பனை செய்யப்படும் குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள்களையும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாவட்ட மகளிரணி தலைவி பாா்வதி, மாவட்ட துணைத் தலைவா் ராம்குமாா், துணைச் செயலா்கள் ராயப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.