அரசு சித்த மருத்துவமனையில் பணி நிறைவு பாராட்டு விழா
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் உள்பட 3 பேருக்கு பணி நிறைவு பாராட்டு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் உள்பட 3 பேருக்கு பணி நிறைவு பாராட்டு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
அரசு சித்த மருத்துவக்கல்லூரி முதல்வா் எம். திருத்தணி, மருத்துவ அலுவலா் பா்வதம், உடற்கல்வி இயக்குநா் சுப்ரமணியன் ஆகியோா் பணி ஓய்வு பெறுகின்றனா். இதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில், பொறுப்பு முதல்வா் சாந்த மரியாள், துணை முதல்வா் மனோகரன், இளநிலை நிா்வாக அலுவலா் மீனாட்சி, அலுவலகக் கண்காணிப்பாளா்கள், மருத்துவப் பேராசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்று பணி ஓய்வு பெறுவோரை வாழ்த்தினா்.