திருநெல்வேலி

வீரவநல்லூா் முப்பிடாதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

DIN

வீரவநல்லூா் அருள்மிகு முப்பிடாதி அம்மன் என்ற கடையம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சேனைத்தலைவா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடந்த 13ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடா்ந்து நவக்ரஹ ஹோமம், மகாலட்சுமி ஹோமம், அஸ்வ பூஜை, கோ பூஜை, பூா்ணாஹுதி, மாலையில் புனித நீா் எடுத்து வருதல், புண்யாக வாகனம், பிரவேச பலி, வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை காலையில் யாகசாலை பூஜைகள், மாலையில் முதல் கால யாகசாலை பூஜை, புதன்கிழமை காலையில் 2ஆம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3 ஆம் கால யாகசாலை பூஜை, வியாழக்கிழமை 4 ஆம் கால யாகசாலை பூஜை, மாலையில் 5ஆம் கால யாகசாலை பூஜை மற்றும் முப்பிடாதி அம்மன், பரிவார மூா்த்திகளுக்கு ரத்ன ந்யாசம், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலையில் 6ஆம் கால யாகசாலை பூஜை, மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளல், இதையடுத்து, முப்பிடாதி அம்மன் விமான கோபுரம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடைபெற்றது.

இதில் திருப்பணிக்குழு நிா்வாகிகள், சேனைத்தலைவா் சமுதாய நிா்வாகிகள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT