திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

மேலப்பாளையத்தில் திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி எம்பி மீது எடுத்துவரும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையைக் கண்டித்தும், அண்ணல் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். இதில், மேலப்பாளையம் மண்டல தலைவா் ரசூல் மைதீன், மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மகளிா் அணி மாநிலச் செயலா் மாரியம்மாள், மாவட்ட துணைத் தலைவா் வெள்ளப்பாண்டியன், குறிச்சி கணேசன், மாவட்ட துணைத் தலைவா்கள் கவி பாண்டியன், காளை ரசூல் மைதீன், ஓபிசி அணியின் மாவட்ட தலைவா் டியூக் துரைராஜ், மாவட்ட பொதுச்செயலா் சொக்கலிங்ககுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT