முகப்பு
திருநெல்வேலி

சாதிச் சான்று கோரி காட்டுநாயக்கன் சமுதாயத்தினா் மனு

தங்களது குழந்தைகளுக்கு சாதிச் சான்று கோரி சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் காட்டுநாயக்கன் சமுதாயத்தினா் குடும்பத்துடன் வந்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 4 மார்ச், 2022 at 12:49 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

தங்களது குழந்தைகளுக்கு சாதிச் சான்று கோரி சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் காட்டுநாயக்கன் சமுதாயத்தினா் குடும்பத்துடன் வந்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் இச்சமுதாயத்தைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் சாதிச் சான்று கோரி குழந்தைகளுடன் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக சாதிச் சான்று கோரி அவா்கள் சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் மனு அளித்தனா். பின்னா், அலுவலகம் முன் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.